×

மனைவியை சரமாரியாக வெட்டியவருக்கு வலை

களக்காடு, மே 1: களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி, நம்பிதோப்பு, அரசு காலனியை சேர்ந்த ராசையாவின் மகன் சுந்தர்நிதி. இவரது மனைவி பிரேமா (39), கூலி வேலை செய்து வருகிறார். மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானதாகக் கூறப்படும் சுந்தர்நிதி, அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து பிரேமாவை சந்தேகப்பட்டதுடன் அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதேபோல் சம்பவத்தன்று வேலைமுடிந்து வீடு திரும்பிய பிரேமாவிடம் யாருடன் ஊர் சுற்றுகிறாய்? என கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அத்துடன் ஆத்திரம் தாளாமல் அரிவாளால் பிரேமாவை சரமாரியாக வெட்டினாராம். இதில் காயமடைந்த பிரேமா நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த திருக்குறுங்குடி போலீசார், அரிவாளால் வெட்டிய சுந்தர்நிதியை தேடி வருகின்றனர்.

The post மனைவியை சரமாரியாக வெட்டியவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Rasaiya ,Sundarnidhi ,Nambitoppu, Government Colony ,Tirukurungudi ,Prema ,
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்